இடுகைகள்

வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

படம்
பரவலாகச் சிலாகிக்கப்பட்டதாலும் எழுத்து மற்றும் கலையைக் குறித்த படம் என்று ஓரிரு நண்பர்கள் பரிந்துரைத்ததாலும் மாலிவுட் டைம்ஸ் திரைப்படத்தைப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. தோல்வியைக் குறித்தும் இருண்மையைக் குறித்தும் கண்ணீரும் கம்பலையுமாக இல்லாமல் நகைச்சுவையுடன் எடுத்திருக்கிறார்கள்.

இரு கோள் இடைத்தூரம்

அ டுப்பில் கறி வேகும் வாசனை உறக்கத்தைக் கலைத்து எழுப்பியது. அம்மாவின் கைப்பக்குவமான செலவு மணம். சின்ன வெங்காயத்தை மொட்டாகத் தொலித்து கொத்துமல்லி தனியா , வற மிளகாய் , தேங்காய்த் துருவல் சேர்த்து வணக்கி அம்மியில் அரைத்த செலவு. கறிக்குழம்பு என்றில்லை , அம்மா அரைத்து வைக்கும் எல்லா குழம்புமே நல்ல ருசிதான்.

ஜாடிக்கு வெளியே இருக்கும் பூதங்கள்

தமிழில் தலித் எழுத்தையும் சினிமாவையும் ”நிலத்தை” மையமாக வைத்து மதிப்பிடுவது வேறொரு கோணத்தில் சரியான அணுகுமுறையாக இருக்கும். இன்னொரு விதமாகச் சொல்வதென்றால் சாதியை நகர்ப்புற மற்றும் கிராமிய தலித் சமூகத்தினர் எப்படி அணுகுகிறார்கள் என்று யோசிப்பது.

அழகு உருவம் - அழகு அருவம்

நாம் பெரிதும் நாயக மனோபாவம் கொண்டவர்கள். அது நம் மரபிலேயே இருக்கிறது. சங்ககால அகப்பாடல்களில் கூட ஆணின் வீரமும் தீரமும் கொடையும் போற்றப்பட்டிருக்கின்றன. ஒரு நாயகன்/நாயகி என்போர் நம்மால் அடையமுடியாத ஆசைகளை, நமக்குச் சாத்தியமாகாத சாகசங்களை நிகழ்த்திக் காட்டுகிறவர்கள். அழுக்கும் வியர்வையும் படிந்த நம் உடல்களுக்கு மெய்நிகராக அமையும் தூய்மையான, ஒளிரும் மாதிரிகள். அதற்கும் அடியிலிருந்து நம் நாயக மனோபாவத்தை இயக்குவது நம்முடைய பாலிச்சை. நாயகத்தன்மை என்பது அழகின் இன்னொரு வடிவம்.

இசங்களைக் குறித்த எளிய குறிப்புகள் (2) - பின்நவீனத்துவம்

உண்மை, அறிவு மற்றும் யதார்த்தம் குறித்த கருத்தாக்கங்களில் நிலவிய மரபான கருத்துக்களை மறுத்து உருவான பெரும் அறிவியக்கமே பின்நவீனத்துவம். 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் எழுந்த பின்நவீனத்துவச் சிந்தனையானது பெருங்கதையாடல்களின் மீதான ஐயப்பாடு, சமூகரீதியாகக் கட்டமைக்கப்படும் அர்த்தத்தின் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தல், பன்மைத்தன்மையின் மீது கவனக்குவிப்பை நிகழ்த்துவது, வேறுபட்ட கண்ணோட்டங்களை முக்கியத்துவப்படுத்துவது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.