பல வருஷங்களுக்கு முன்பு, ஓரான் பாமுக் எழுதிய தி மியூசியம் ஆஃப் இன்னசென்ஸ் (வெகுளித்தனத்தின் அருங்காட்சியகம் என்றே இதை மனதில் கொண்டிருக்கிறேன், அறியாமையின் அருங்காட்சியகம் என்றல்ல) நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளியானவுடன் உடனடியாக வாசித்தேன். அப்போது நாவல் பெரிதாக ஈர்க்கவில்லை. அது பாமுக்கின் முந்தைய படைப்புகளிலிருந்து சற்று கீழே இறங்கிவிட்டதாகத் தோன்றியது. நாவலின் அடிப்படையான ஆதார உணர்ச்சி பிடிபட்டாலும் அது வெகுஜனத் தன்மை உடைய நாவல் என்று தோன்றியது, இன்றைக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். சங்க இலக்கியம் தொடங்கி நாளது வரையான தமிழர்களின் கலையிலும் வெகுஜனக் கலாச்சாரத்திலும் காதல் ஒரு வதிபட்ட படிமம். நமது திரைப்படங்கள் காதலைத் துவைத்துக் காயப்போட்டிருக்கின்றன. நமது கற்பனையில் இருக்கும் வடிவத்தில், நிஜ வாழ்க்கையில் காதல் இல்லை.
Mar 10, 2026
Mar 8, 2026
டாங்கோ நாவல் குறித்த மதிப்புரைகளின் தொகுப்பு
டாங்கோ நாவல் குறித்து என் பார்வைக்கு கிடைத்த மதிப்புரைகள் மற்றும் விமர்சனங்களின் தொகுப்பு இது. இவற்றை வழங்கிய நண்பர்களுக்கும் பிரசுரித்த இதழ்களுக்கும் நன்றி
மதிப்புரை- சுனில் கிருஷ்ணன்
குணா கந்தசாமி எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். புதிய நாவலான “டாங்கோவை” அவரது இரு இலக்கிய நண்பர்களான கே. என். செந்திலும் பாலாவும் வரைவு வடிவத்தில் வாசித்தார்கள் என்பது அவரை புரிந்து கொள்ள உதவும். பாலாவும் செந்திலும் ஒரு கிடைமட்ட கோட்டின் இரு எல்லைகள் என்று வைத்துக்கொண்டால் குணா இவர்கள் இருவருக்குமான நடுப்புள்ளி. அவரால் சுக்கிலம் போன்ற முற்றிலும் நவீன வாழ்வின் சிடுக்கை பேசும் கதையை எழுத முடியும் திரிவேணி போன்ற மண்ணில் காலூன்றிய கதையையும் எழுத முடியும். இந்த வீச்சு அவரை எனக்கு முக்கியமான எழுத்தாளராக ஆக்குகிறது.
Mar 2, 2026
சிறுகதை எழுதுவது எப்படி
(01/03/2026 அன்று வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஏற்பாட்டில் இணையவழியில் நிகழ்ந்த சிறுகதைப் பயிற்சி முகாமில் பேசியவையின் கட்டுரை வடிவம்)
புலம்பெயர் இலக்கியத்தின் கருப்பொருட்கள்
சிறுகதை எழுதுவது எப்படி என்பதைப்பற்றி பேசுவதற்கு முன்னால் இந்த உரையாடலின் கருவான புலம்பெயர் வாழ்க்கையின் இலக்கியக் கருப்பொருட்கள் குறித்தும் பேசலாம். புலம்பெயர்தல் மனிதர்களுக்கு மிகப்பழைய விஷயம். ஆதிகாலத்தில் மனிதன் உணவுக்காக அலைந்து இடம்பெயர்வது நடந்தது. அப்படி அலைந்து திரிந்த, இன்னும் மொழி தோன்றியிராத காலத்திலும் மனிதனுக்கு தன்னுடைய நினைவைப் பதியவைக்கும் எத்தனங்கள் இருந்திருக்கின்றன என்பதற்கு குகை ஓவியங்கள் போன்றவை சாட்சியாக இருக்கின்றன. மொழி உருவானபிறகு அது மனித நினைவுகளின் பெட்டகமாக மாறுகிறது.
Feb 23, 2026
மொழிபெயர்ப்பின் நிறம் - ஆர்.சிவகுமார் கருத்தரங்கு
நேற்று 22-02-2026 அன்று சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் மொழிபெயர்ப்பாளர் திரு. ஆர்.சிவகுமார் அவர்களுடைய மொழியாக்கப் படைப்புகள் குறித்த ஒருநாள் நிகழ்வை ஆகுதி அமைப்பு சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தது. நான் மதியம் பனிரெண்டு மணியளவில் சென்றேன். அரங்குக்கு வெளியே நூல்வனம் மணிகண்டன் மட்டும் தனியே யாரோவொரு நண்பருக்காகக் காத்திருந்தார். முழுநாள் நிகழ்விலும் நான் பார்வையாளராகப் பங்கெடுத்துக்கொண்டேன். சிறப்பாகப் பேசிய உரையாளர்களின் பேச்சாற்றல் மீது சிறிய பொறாமை எழுந்தது என்னவோ உண்மைதான்.
Jan 4, 2026
எழுத்தாளருக்கான மதிப்பூதியம் - ஒரு விவாதம்
1.
இந்த விஷயத்தை இப்போதைக்கு நான் முழுக்கவும் புறவயமாகவும்( Objective) ஆகவும் கொள்கையளவிலுமே (In principle) வைத்துப் பேச நினைக்கிறேன். தமிழில் பதிப்புத் தொழிலில் தேனும் பாலும் ஓடவில்லை என்று புரிகிறது. ஆனால் அது நிஜமாகவே மோசமான சூழலில் இருக்கிறதென்றால், எவ்வளவு மோசமான சூழலில் இருக்கிறது என்பது, பதிப்பாளர்கள் தரவுகளின் மூலம் வெளிப்படையாக வைக்காதவரை நமக்குத் தெரியப்போவதில்லை. ஒரு பதிப்பகம் நீண்ட காலம் தொழிலில் இருந்தால் நஷ்டத்தில் இயங்கவில்லை என்று ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்ளலாம்.
Jan 2, 2026
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது நிகழ்வு - 2025
டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் கோவை ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங்க அரங்கில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – 2025 விருது நிகழ்வில் கலந்துகொண்டது நிறைவையும் ஊக்கத்தையும் அளித்தது. ரமேஷ் பிரேதன் மறைந்துவிட்ட சூழலில் அந்த விருதுக்கான தொகையை ஐந்து இளம் எழுத்தாளர்களுக்கு பட்டயத்தோடு பகிர்ந்து அளித்ததின் மூலம் சரியான விதத்தில் முன்னெடுத்துச் சென்று நிறைவு செய்திருக்கிறார்கள்.
கவிதையில் அர்த்தமும் அனுபவமும்- துரிஞ்சி கவிதைத் தொகுப்பு குறித்து
கல்விப்புலம் சார்ந்த மேற்கத்திய இலக்கிய விமர்சன மரபில் உருவான ரஷ்ய உருவவாதம் (Russian Formalism) மற்றும் புது விமர்சனம் (New Criticism) ஆகிய இலக்கியக் கோட்பாடுகளின் சில முக்கிய அம்சங்களை மீள்பார்வை செய்துகொள்வது இலக்கிய விமர்சனத்தை இன்னும் நெருக்கமாக அணுகுவதற்கு உதவும். இவை புதிய விஷயங்கள் அல்ல, கல்விப்புலம் சார்ந்த விமர்சனத் துறையில் ஏற்கெனவே நூற்றாண்டாகப் புழங்குகிறவைதான். இலக்கிய விமர்சனத்தில் இவ்விரு கோட்பாடுகளும் இன்றைக்கு அவற்றின் ஆதார வடிவிலேயே பயிலப்படாவிட்டாலும், இவற்றிற்குப் பிறகு உருவாகி வந்த அமைப்பியல், பின் அமைப்பியல் போன்ற கோட்பாடுகளுக்கு அடிப்படைகளை வழங்கியிருக்கின்றன.
Subscribe to:
Comments (Atom)

.jpg)

