வனத்தின் இடையே

வனத்தின் இடையே-தன்
வாழ்வின் துக்கத்தை
இசைத்துப் போகிறதொரு பறவை

பட்டுப்போன மரங்களின்
மொட்டைக் கிளைகளில்
நெளிகிறது வெயில்

சருகுகள் நொறுங்குகின்றன
அரவத்தின் ஊர்தலுக்கு

கண்கள் பூத்துப்போயின
பச்சையாயொரு தளிர் தேடி

ஓடை ஓடிய தாரைகளில்
ஒளிர்கின்றன கூழாங்கற்கள்

நீலவானில் கலைகிறதொரு
வெள்ளை மேகம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence