உன்னையே
காடு மலைகளின் வழியே
கடுந்தொலைவு சுமந்தேன்
பாதைகளின் மேலே
கரும்பச்சையாய் மின்னியதும்
வழியே
சருகாய் கிடந்ததும்
கீழே
மோனத்தவத்தில் இருந்ததும்
நீயே
அருந்திக் குறைவுண்டது
வளர்ந்தது
கண் விழித்தது
உயிர்மையின் தானியம்
ஓடை அருவி
ஏரி ஆறுகளின்
வழியே
அடையாளம் அழித்தேன்
சங்கமமென்றது கடல்
விழுங்கியது மீன்
ஆடியது கடல்
கூடியது மேகம்
காடு மலைகளின் நடுவே
ஏன் எப்படி’
ஒரு பாதை?
No comments:
Post a Comment