கதறல் மிதக்கும் வெளி
பழைய நாட்களின் குளிர்மையில்
தேக்கியிருக்கிறது ஜீவிதம்
சொற்களின் மூலம்
ஆயுதம் செய்யப்பழகிவிட்டவர்கள்
ரகசியமாய் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
வேட்டையாடுதல் பற்றிய குறிப்புகளை
காலமாகிவிட்ட
நீதிக்கதை தேவதைகளின் பிணங்கள்
அழுகிக்கொண்டிருக்கின்றன
குழந்தைகளின் கனவில்
செத்துக் கொண்டிருப்பவனின்
ஆபரணங்களைத் திருடுபவனுக்கு
காத்திருக்கின்றன முத்தங்கள்
இலையுதிர்கால காட்டைப்போல்
காலம் எரிந்துகொண்டிருக்கிறது
எந்த வலிவுமில்லாத
இவன் செய்யத்தக்கது
இனியேதுமில்லை
மிச்சமிருக்கும் மதுவோடு
வடக்கிருத்தல் தவிர
No comments:
Post a Comment