உதிர்ந்து கிடக்கும்
சிறகின் மீது
கவிந்து கிடக்கிறது
அதன்
வானம்
**
புல்லாங்குழல் விற்பவன்
குழலூதுகிறான்
உமக்கு
இசை தெரிகிறதா?
பசி தெரிகிறதா?
**
அழுகிறது
நரமாமிசம் தின்பவனின்
முன்னிருக்கும்
குழந்தை.
**
பின் மதியத்தின்
மோனத்தவத்தில் இருக்கிறது
அணிலாடும் தரு
நறுமணத்தைலம் பூசி
நீராடிக் கொண்டிருக்கிறாள் ரதி
தருவின் நிழலெடுத்து
தாபம் தணிக்கிறான் தேவன்.
No comments:
Post a Comment