Oct 20, 2024

கவிதை

புலன்கள்
திக்குக்கொன்றாய் இழுக்க

பூமி இன்னுமொருமுறை புரள

நரம்புகளெங்கினும்
கொடுவெப்பம் ஏற

கூத்தனின் பாதம்
தலைமேல் ஆட

துளைகளின் வழி
ஊழி உள்ளேற

உச்சத்தில்
சில்லுகளாய் சிதறி
விழிக்கிறான்

தரிசனச் சுவையில்
உரத்த சிரிப்பினிடையே
நம்முன் விழுகின்றன
அவன் கேள்விகள்

நாம் சங்கிலிகளைத் தேடுகிறோம்.

No comments: