ஏர்முனை

எம்பதடிக் கெணத்த
எட்டிப்பாத்தா
காஞ்ச கரும்பாறத
கண்ணுக்குத் தெரியுது.

கடுந்தீப் பொகையாட்ட
நெளியுது
காத்தெழுப்பும் புழுதி.

வட்டியிருக்குது
கள்ளிக்காடாட்டம்

காயத கண்ணோட
காஞ்ச வானம் பாக்கற
காணியாளன் நெஞ்சுல
உழுதுக்கிட்டு இருக்குது
துருப்புடிச்ச ஏர்முன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence