எம்பதடிக் கெணத்த
எட்டிப்பாத்தா
காஞ்ச கரும்பாறத
கண்ணுக்குத் தெரியுது.
கடுந்தீப் பொகையாட்ட
நெளியுது
காத்தெழுப்பும் புழுதி.
வட்டியிருக்குது
கள்ளிக்காடாட்டம்
காயத கண்ணோட
காஞ்ச வானம் பாக்கற
காணியாளன் நெஞ்சுல
உழுதுக்கிட்டு இருக்குது
துருப்புடிச்ச ஏர்முன
No comments:
Post a Comment