சலனமற்றுக் கிடக்கிறது
உப்புக்கடல்
துணுக்களவு மேகமுமின்றி
நீளமாய் கனல்கிறது வானம்
தீராத விடாயில்
திசையெங்கும் வாய்விரித்து
தவிக்கிறது வேர்
கொடியில் வழியும் நிணத்தை
சுமக்கும் காற்று
எரித்தழிக்கிறது வண்ணத்துப்பூச்சிகளை
இன்று மாலை
உதிர்ந்துவிடப் போகும்
ஒற்றைப்பூவில் மட்டும்
குளிர்ந்து கிடக்கிறது
துளியளவு தேன்.
No comments:
Post a Comment