Apr 13, 2015

பழுப்பு நிற நெல்மணி

இப்பூக்கள்
தம்மை மணலாய் உதிர்த்துக்கொள்கையில்
இப்புகைப்படம் தன்னிலிருந்து
காலத்தையும் உருவத்தையும்
உதறிவிட்டு அம்மணமாகிறது

மதிலின் மேலிருந்த பூனை
குதிக்கும் சப்தத்தில்
கண் திறக்கத் துவங்குகின்றன
பழுப்பு வண்ண நினைவுகள்

எரிக்கப்பட்ட நினைவுகளிலிருந்து
சிதறும் சாம்பற்துகள்கள்
மேகங்களின் கருவெளியில்
புதைகையில்- நான்
பத்தாயத்தில் மீந்த
ஒற்றை நெல்மணியாகிறேன்.

No comments: