பழுப்பு நிற நெல்மணி

இப்பூக்கள்
தம்மை மணலாய் உதிர்த்துக்கொள்கையில்
இப்புகைப்படம் தன்னிலிருந்து
காலத்தையும் உருவத்தையும்
உதறிவிட்டு அம்மணமாகிறது

மதிலின் மேலிருந்த பூனை
குதிக்கும் சப்தத்தில்
கண் திறக்கத் துவங்குகின்றன
பழுப்பு வண்ண நினைவுகள்

எரிக்கப்பட்ட நினைவுகளிலிருந்து
சிதறும் சாம்பற்துகள்கள்
மேகங்களின் கருவெளியில்
புதைகையில்- நான்
பத்தாயத்தில் மீந்த
ஒற்றை நெல்மணியாகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence