மிருகத்தின் ஆன்மாவை மேவுதல்

குறைந்தபட்சம்
மனிதனான
என்
பழுப்புவண்ணக் கண்கள்
புராதன நீதிகளை தொழுகிறது
ஆனால்
அதன் நீரடியில்
வெளியே கேட்காமலே
அடங்குவதொரு கலகக்குரல்

தெய்வத்திற்கோ
உலகின் சமநிலையை
காக்க வேண்டியிருக்கிறது
தெய்வத்தோடான என் சமர்
இருதயத்தின் தசையளவைக்குள்
நிகழ்கிறது
அப்போதென் கண்ணீர்த்துளிகள் விலையுயர்ந்தவை….
தெய்வம் பிதற்றும் நீதியை
கண்ணீர்த் துளிகள்
முழுக்கவும் மறுக்கின்றன
நானோ முழக்குகிறேன்
தெய்வத்திற்கு எதிரான சங்கீதத்தை
அப்போது ஒரு மிருகம்
தெய்வத்தின் ஆன்மாவை மேவுகிறது
நான்
மிருகத்தின் ஆன்மாவை மேவுகிறேன்
அக்கணம் வரலாற்றில் உலகம் தட்டையாகவிருந்தது
என்னும்
எதிர் கடந்த நிகழ்
காலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence