Apr 13, 2015

பறவைகளின் ஒற்றையடிப்பாதை

ஒற்றையடிப்பாதையின் மேலே
வாசனைப்பறவைகள் தாழப்பறக்கையில்
நறுமணத்தின் தற்காலிக சிறுமேகம்
குடையாய் கவியும்
இசைவாய் எல்லாம் மயங்கும்
ஒரு கணத்தில்
கிறங்கும் கண்படலத்தில்
வர்ணமாய் துலங்கும்
சுகந்தத்தின் நூலிழைகள்
அதீதங்களுக்கு இடையாடும்
தூரியென்று மாறிவிட
கதகதப்பு பூண்டுவிட்ட
இருதயப் புல்வெளியில்
பூனையின் பாதம் வைத்து
நகரும் வாசனைகளை மலர்த்தும்
பறவைகள் போகும்
திசைநோக்கியே நீள்கிறது
ஒற்றையடிப்பாதை.

No comments: