அகக்கூத்து

தன் புராதன அடவுகளிலிருந்து
நித்யகன்னியாய் உருமாறூகிறான் அவன்
பாவங்களின் கண்வீச்சில் திறக்கிறது
யெளவனத்தின் முடிவுறாத பாதை
பறக்கும் ராகமாகும் கம்பளத்திலேகி
வெளிப்போகிறதவள் குரல்
இசையின் விளிம்புக்குள்
தளுங்கும் உடலசைவுகள்
பெயரறியாப் பறவையுடையாதாகிறது
கூந்தலில் சொதும்பிய
அனாதி இருளில்
மின்மினிகளாகின்றன நோக்கும் கண்கள்
நுரையென்று காமமும்
கள்ளென்று காதலுமாய்
எமது உடலின்
தொனி மாறுகையில்
மீவெளியில் முடிவுறாத
களியாட்டத்தின் வர்ணங்களாய்
அசைகிறது அவள் முந்தானை
ஒளியின் இளநிறம் பாயும் வைகறையில்
ஒரு தொன்மமாய் மாறிவிடும்
அவள் நிழல்
நனவிலிச் சித்திரமாகிவிட
ஒப்பனை கலைத்து
கிழக்கே மறைகிறான்
மைதானமெங்கும் உதிர்ந்த ஒயிலை
பனி நனைக்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence