Apr 13, 2015

அணங்கு இரவு

பிறிதோர் அன்பின்
பாடல் பெறாத
அகப்பரப்பில்
புறாக்களின் துயரக் கும்காரமென
உயிரின் வாதை கொள்ளும்
சப்தச்சூல்

படரும் கனவில் மின்னும்
பச்சை நட்சத்திரங்கள்
வெளிறும் இருளழிவில்
சாம்பலாய் நிறக்கிறது
வரும்பொழுது

நிமித்திகங்கள் ஏதுமற்ற
தனிமையின் கார நெடியோடு
பூக்கும் அன்றின் மலரெங்கும்
கல் மகரந்தகங்கள்

திசைகள் பூட்டப்பட்ட
இரவில் படரும்
யோனிகளின் தாய்மை வாசனையோ
தகிப்பில் பிறந்த
என் கைக்கிளைப் பாடல்களின்
அர்த்தங்களை திரித்து விடுகிறது.

No comments: