இறந்தகாலம் இன்னும் முடியவில்லை

இறந்தகாலம் இன்னும் முடியவில்லை
மறையும் அடுத்த கணத்திற்குள்
மெளனமாய் அது கரைந்துகொண்டிருக்கிறது
என்ற ஆக்டோவியா பாஸின்
கவிதை வரிகளை வாசித்தபோது
வரலாற்றின் எழுதப்படாத வரிகளுக்குள்
அத்தனை பிணங்கள்
புதைக்கப்படாமல் கிடப்பது கண்டு
கனவுகள் நிர்மூலமாகும்
மூடுபனி இரவின்
இவ்வகாலத்தில்
உப்பைப் பொரியும்
இச்சொற்களிடையே
அவர்களைப் புதைத்தபின்
நானும் அவர்களும்
ஒரே காலத்தில்
உறங்குகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence