Oct 26, 2024

தரிசனம்

எதிர்போன முகங்களில்
அர்த்தத்தை ஏந்திவிட்ட நிறைவும்
பசி தணிந்த அமைதியும்
வழக்கம்போல் எனக்கு
இதிலும் நேரங்கடந்துவிட்டது
முன்னால் யாருமில்லை
நொடிக்கொருதரம் திரும்பிப் பார்க்கும்
என் கண்களில்
சிறுத்து மறைகின்றன முதுகுகள்
தோளில் கனக்கிறது இன்மை
சேருமிடமோ
கண்ணுக்கு அண்மித்து
கால்களுக்கு மாயங்காட்டுகிறது
இருளும் வேளையில்
நா வறண்டு களைத்து
பாதையோரம் அமர்ந்தவன்
வானிருந்த மூன்றாம்பிறை கண்டேன்
கீற்றாய் ஒரு தரிசனம்
காற்றாய் இக்கணம் நடக்கிறேன்
என் இன்மை கனக்கவேயில்லை.

No comments: