Apr 13, 2015

படுகளம்

வீடுகள்
கதகதப்பை சிருஷ்டிக்கும்
நள்ளிரவில்
இருளின் குளிர்படலம் மிதக்கிறது
தனிமைவீதியில்
லேசாக அசையும் நிழல்களுக்குள்
தூரத்து நாய்களின் ஒலியாய்
சாபக்குரல்கள் தேய்கையில்
மனிதர்கள் சவமாய் கிடக்கிறார்கள்
களைப்புற்ற உடலோடு ஒருத்தி
வீடு திரும்பும்போது
வீட்டிலிருந்து வெளியேறிய
பிதிர் கலங்கிய ஒருவன்
அவளைப் பிரக்ஞையற்றுக் கடக்கிறான்
திருடர்கள் ஊருக்குள் இறங்க
இன்னும் நேரமிருக்க
உலர்ந்துவிட்ட பியர்பாட்டிலை
இரவின் மீது வீசுகிறேன்
தெறித்த தன் இரத்தத்துளியை
நான் விரும்பிச்சுவைப்பது கண்டு
வன்மத்தில் பாய்ந்து
வேட்டைநாயைப் போல்
குதறி குற்றூயிராக்கிவிட்டது
துயரார்ந்தவர்களே...
யாரும் இரவின் மீது
பியர் பாட்டிலை வீசவேண்டாம்.

No comments: