நாஸ்டாலஜியா தீவு

உறக்கமற்ற பின்னிரவெனும்
பெரும்பறவை
கடல்கள் மலைகள் தாண்டி
தூக்கிப்போகும் நாஸ்டாலஜியா தீவுக்கு

குற்றத்தின் கசப்பு வாசனை
படிந்த சுயரகசியங்கள்
தமது உப்பை வடித்துவிட
துறவமைதி எய்திவிட்ட
நினைவின் ஐம்பூதங்களில்
உயிர்துடிப்பன்றி வேறு சலனங்களில்லை
ஓவியத்தில் நிலைபெற்றுவிட்ட
வசந்தபருவத்தில்
மலர்கள் உதிரப்போவதில்லை
மூப்படையா வண்ணத்துப்பூச்சிகள் சிறகசைக்கும்
குழந்தைகளின் உறக்கப்புன்னகையாக
பேரமைதி கொள்ளும்
காலப்பரப்பில்
திரும்பவும் கருவறையை நோக்கித்
தவழும் என் வேட்கையை
கேட்டலறும்
பறவை
தீவை மறையவைத்து
பகலை
விரித்துவிட்டு
பறந்தோடிவிடுகிறது என்றும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence