அன்னையர் கண்ணீர்
அன்னை அழுகிறாள்
ஒரு கண்ணீர்த் துளி
அர்த்தமற்று உருவாவதில்லையென்பதால்
அவள் கண்ணீர்த்துளிகள்
தம் காரணங்களைக் கேவிக்கொண்டே
உதிர்கின்றன
வாழ்வின் அர்த்தக்குலைவுகளை
பொருத்தமற்ற காலத்தில்
அவள் காண நேர்ந்துவிட்டது
ஒடுங்கியமர்ந்து கண்ணீர் உகுப்பவளின்
நரைத்த கூந்தலை வெறிக்கிறேன்
வற்றிய சுரப்பிகள் உடையவனான
என்னால் அழ இயலவில்லை
அற்று அர்த்தம் தரும்
சில பூஞ்சையான ஆறுதல்களும்
சொல்லிடுக்குகளில் கிடைக்கவில்லை
அவளுக்கொரு புன்னகையை
வரவழைத்துக் கொடுக்கும்
மந்திரமும் தெரியவில்லை
அவள் கண்ணீர்த்துளிகள்
உலராமல் தேங்குகின்றன
கர்ப்பத்துளி
நான் உலர்கிறேன்.
ஒரு கண்ணீர்த் துளி
அர்த்தமற்று உருவாவதில்லையென்பதால்
அவள் கண்ணீர்த்துளிகள்
தம் காரணங்களைக் கேவிக்கொண்டே
உதிர்கின்றன
வாழ்வின் அர்த்தக்குலைவுகளை
பொருத்தமற்ற காலத்தில்
அவள் காண நேர்ந்துவிட்டது
ஒடுங்கியமர்ந்து கண்ணீர் உகுப்பவளின்
நரைத்த கூந்தலை வெறிக்கிறேன்
வற்றிய சுரப்பிகள் உடையவனான
என்னால் அழ இயலவில்லை
அற்று அர்த்தம் தரும்
சில பூஞ்சையான ஆறுதல்களும்
சொல்லிடுக்குகளில் கிடைக்கவில்லை
அவளுக்கொரு புன்னகையை
வரவழைத்துக் கொடுக்கும்
மந்திரமும் தெரியவில்லை
அவள் கண்ணீர்த்துளிகள்
உலராமல் தேங்குகின்றன
கர்ப்பத்துளி
நான் உலர்கிறேன்.
கருத்துகள்