சகோதரிகளின் நிலம்

ஆயில்ய மலர்களின்
மணம் நிரம்பிய
சகோதரிகளின் நிலத்தில்
சூரியன் தக்காளிப்பழமாகிறான்
வேலியில் பாடலை
எழுதிய பறவைகள்
வாய்க்கால் நீரை
விரித்துப்படிக்க
நீர்ச்சொற்கள் சிதறுகின்றன
பச்சையக் குடைகளின்
பக்கவாட்டில் தளும்பும்
வெயிலின் முலைப்பால்
மண்ணின் கண்மணிகளில்
வழிந்தோடுகிறது
கிணற்றுக்குள் குளிக்க
இறங்கிய மேகங்களுக்கு
சுவர்ப்பூக்கள் தம்மைப் பரிசாக்க
நிழல்வெளியின் ஏகாந்தத்தில்
சகோதரிகள் பட்டாம்பூச்சிகளாவது
கண்டு நிற்கும்
துர்க்கனவுகள் நிரம்பிய
அவர்களின் முன்னம் அறிந்தவனிடம்
அந்தரங்கம் பகிரத்துவங்குகிறது காலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence