பிரேதங்கள் அலையும் இரவு
கடந்த
இன்றைய சந்தி
எனக்கொரு
சாவைக் கையளிக்கையில்
அபூர்வமழியும்
இறுதிக்கணமாயிருந்தது
வான்
திசையழிந்த இருளின்
தொலைவறியா ஆழத்தில்
பூத்த ஒளித்தளிர்களெல்லாம்
கழிந்த
பழங்கனவின் சாட்சியாக
அர்த்தத்தை இழந்துவிட்ட
ஓலத்துயரமொழியில் எழும்
சாமக்கூகையின் கதறல்
திசைகளில் வடிகிறது
நிறமழிந்த வன்ணத்துப்பூச்சிகள்
வந்து குழுமும்
என் வீடோ
இந்த நிமிஷத்தில்
கல்லறை நிலமாகிறது.
இன்றைய சந்தி
எனக்கொரு
சாவைக் கையளிக்கையில்
அபூர்வமழியும்
இறுதிக்கணமாயிருந்தது
வான்
திசையழிந்த இருளின்
தொலைவறியா ஆழத்தில்
பூத்த ஒளித்தளிர்களெல்லாம்
கழிந்த
பழங்கனவின் சாட்சியாக
அர்த்தத்தை இழந்துவிட்ட
ஓலத்துயரமொழியில் எழும்
சாமக்கூகையின் கதறல்
திசைகளில் வடிகிறது
நிறமழிந்த வன்ணத்துப்பூச்சிகள்
வந்து குழுமும்
என் வீடோ
இந்த நிமிஷத்தில்
கல்லறை நிலமாகிறது.
கருத்துகள்