வெடித்த பாதங்கள்
கடக்கும்
வறண்ட இட்டேரிகளின்
பக்கவாட்டில் மீந்தொளிர்வது
பச்சை உலகின்
அணையா விழிகள்
மண்ணின்
நோய்மைப் பெருமூச்சுகள்
பேரூழியான காலங்களில்
கைவிட முடியாத
ஒற்றை நம்பிக்கையாக
அது மாறுகிறது
வெயிலை
உடுத்திய சிறார்கள்
சாறொழுகும் வாயோடு
புறங்களில் ஓட
காலத்தில் முளைத்த
கள்ளியோ
உடலின் விஷத்தையெல்லாம்
கனியாக
மாற்றிக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment