Apr 13, 2015

சம்பலாங்கி பறவைகள் பறக்கின்றன

சம்பலாங்கி பறவையின் வனத்தில்
உயிர்க்கிறார்கள்
மரித்த கன்னிகள்
தீண்டப்படாத கன்னிமையின்
கருமைச்சுகந்தம் நுகர்ந்த
உயரக்கழுகுக்கு மூண்டெழுகிறது
தற்கொலையின் பெருவிருப்பு
உடலற்ற நிர்வாணமும்
காலமற்ற வெளியும்
கூடிய கணத்தில்
உடலைத் தொடர்ந்திருந்த
வேட்டைகளின் வெறிக்கூவல்
கன்னிகளுக்கு எதிரொலிக்கும்போது
அவர்களின் பிரார்த்தனையோ
தம் யோனிகளைச் சூலிட்டிருந்த
உன்னதங்களைச் செரித்த
நிலத்தின் தேம்பல்
வனாந்தரத்தைத் தாண்டிய
வீடுகளில் வசிக்கும்
பூப்படையா சிறுமிகளுக்கு
கேட்டுவிடக் கூடாதென்பதுதான்.

No comments: