அந்தியில்

அந்தியில்
என்னைக் கடப்பவளின் உடலிலிருந்து
உயிர்த்த வண்ணத்துப்பூச்சியிலிருந்து
கிளர்ந்தெழும் கன்னிமையின்
வாசனையில்
நான் தாவரமாக
சட்டெனப் பூத்த
தாபத்தின் நீலமலரில்
வண்ணத்துப்பூச்சி
அமர்ந்த நொடியில்
பெருங்கழுகாகி
ராட்சதக் கால்களில்
அவளைக் கவ்விக்கொண்டு பறக்க

நீலமாய் எரியத்துவங்கினேன் நான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence