மின்மினி

சுவர்கள்
குளுமையேற்றிக் கொண்டிருந்த பொழுதொன்றில்
வாய்த்தது
மெழுகுத்திரியின் மீதிருந்த ஒளியும்
நானும் தனித்திருக்க

பேரொளிப்பரப்பின் சிற்றசைவில்
ஒளித்துகளொன்று தனித்தேகிய பிரம்மகண்த்தில்
அஃதெனக்கு வழங்கத் துவங்கியது
தன் ரூப தரிசனங்களை

கடுவிடங்கொண்ட அரவத்தின்
படமெடுத்த சிரசாய்
முற்றிச் சாய்ந்த நெற்கதிராய்
கூப்பிய கரங்களாய்
பென்சிலின் சீவப்பட்ட முனையாய்
குறிகொள்ள சுரந்த யோனியாய்
பெயர்களற்ற வடிவங்களாய்

நீண்டு தொடர்ந்து

தட்புதைந்த இருளையுங் காட்டி
ஒளி விடைபெற்ற அவ்விரவில்
உன் ஜன்னலின் வழிக்கடந்த
அம்மின்மினி நான்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence