Oct 20, 2024

பாழை அடைகாப்பவன்

பாழை அடைகாப்பவன்
நீ

நிரம்பி வழியும்
உன் சூனியவெளி
ஒளிச்சிதறலை வெறுக்கிறது

நீ
எரியூட்டிக்கொண்ட நம்பிக்கைகளின்
சாம்பற்புழுதி படிந்த
உன் சொற்கள்
புனிதங்களைக் கல்லாலடித்துக்கொண்டிருக்கின்றன

தவறவிட்ட
அவ்வொற்றைக்கணம்
நினைவுகளுக்குள்
ஆழம்போன முள்ளாய் கடுக்கிறது

குழையும் அந்தி மட்டும்
சற்றே உன்னில்
நிச்சலனத்தை விசிறுகிறது

அடர் இருளின்
பெருமெளனம்
உன் ஓலங்களை
எதிரொலிப்பற்று விழுங்கும்
பின்னிரவில்
யாதுமற்ற வெறுமையிடம்
யாசிக்கையில்
இரவு உன்னிடமிருந்து
எல்லாவற்றையும் களவாடிப் போகிறது.

No comments: