குறுங்கவிதைகள்

விடிகாலைப் பொழுதொன்றில்
செத்துப்போவதாக
கனவு கண்டு
வியர்த்தெழுந்தேன்

விடிந்திருந்தது.
 
**
பிடிமானமற்ற கணத்தில்
கரையொதுங்கி
உயிர்க்காற்றிற்காய் தவித்து
துள்ளிக்குதித்த மீனின்
மரணத்தை வெறித்திருந்துவிட்டு
தூக்கி எறிந்தேன்

நீருக்குள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence