Oct 20, 2024

வாழ்வும் சாவும்

பூவனத்தில் வாழ்கிறாள்
சூனியக்காரி

ஆதியிருள் மீத்திருக்கும்
குகையிருக்கிறாள் தேவதை.

யாரேனும் ஒருவரை எதிர்பார்த்து
உச்சிக்கரட்டில்
உயிர் வைத்திருக்கிறான் அவன்

ஒரு குழந்தையாய் உருமாறி
அமுதம் நிரப்பிய கிண்ணத்தோடு
சூனியக்காரி அவன் முன்னிருக்கையில்
வனப்புமிகுந்த விலைமகளின் ரூபத்தில்
மாமிசத்தட்டை நீட்டுகிறாள் தேவதை

ஒன்றைக்கொள்ள மனமின்றி
இரண்டையுந் தேர்ந்தபின்
வாழ்ந்தே செத்துக்கொண்டிருக்கிறான்.

No comments: