நம் கடவுளின் புன்னகை

முறியும் கிளையில்
மலர்ந்திருக்கும் பூக்கள்

தேனீருக்குக் காசில்லாத
மழைநாள்

முகம் பதியவைத்துக்கொள்ளுமுன்
கடந்துவிடும் பேரழகிகள்

தாயற்ற சிசுவுக்கான
இரவல் தாலாட்டு

வாய்த்தும்
நிறைவில்லாப் புணர்ச்சி

போதாமைகளின் இடையில்
புன்னகைக்கிறார்
நம் கடவுள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence