Oct 20, 2024

நம் கடவுளின் புன்னகை

முறியும் கிளையில்
மலர்ந்திருக்கும் பூக்கள்

தேனீருக்குக் காசில்லாத
மழைநாள்

முகம் பதியவைத்துக்கொள்ளுமுன்
கடந்துவிடும் பேரழகிகள்

தாயற்ற சிசுவுக்கான
இரவல் தாலாட்டு

வாய்த்தும்
நிறைவில்லாப் புணர்ச்சி

போதாமைகளின் இடையில்
புன்னகைக்கிறார்
நம் கடவுள்

No comments: