சதங்கை பூட்டிய இரவின்
ஆனந்தச் சதிரை
அத்தனை வெட்கம்
பூசிய வானம்
உடலைக் கண்களாக்கி ரசிக்கிறது
களி நுரைக்கும் இவன்
தன் அறைகூவலுக்குப் புறமோடிய
கடவுளர்களை இகழ்ந்துவிட்டு
திசைகளெங்கும் முகிழ்விக்கிறான்
அன்பின் பனித்துளிகளை
விரகம் ஏறிவிட்ட இரவு
வாவென்று அழைக்க
தனித்தாடிய அதற்கு
இவன் துணையாக
மரம் நின்றாடியது
காற்று சுழன்றாடியது
வானம் கவிழ்ந்தாடியது
மண் ஆடாமல் ஆடியது
கடவுளர்களே மறைந்தாடினர்.
No comments:
Post a Comment