Oct 20, 2024

அன்பின் சாரல்

சிற்றோடைக்குள்
உறைந்தவொரு கூழாங்கல்

கரைகளற்ற வானில்
ஒற்றையாய் மினுக்கும்
பின்னிரவு நட்சத்திரம்

இசை முடிந்த பொழுதில்
மெலிதாய்த் துவங்கும்
பேரமைதியின் கீற்றிசை

இரவின் முதல் பனித்துளி
கொள்ளும் பச்சையம்

மலைமுகட்டு ஒற்றைப்பூவை
கழுவிப்போகும் காற்று

உன் அன்பின் சாரலோ
பிரபஞ்சத் தாய்மையோடு
என்னில் பொழிகிறது.

No comments: