கடவுள் வந்திறங்கும்
பூசாரியின் தேகமென
உடல் விதிர்க்கின்றது
உன் பார்வைகளின் தீண்டலில்
யாக்கை கொதிக்கும்
இவ்வெக்கையைக் கொடுத்துவிட்டு
பனிமலையென நீயிருக்கிறாய்
இரைவெறியில் அலையும்
காதல் மனசு
ஊசிமுனையில்
ஊழித்தாண்டவம் நிகழ்த்துகிறது.
உனக்கெப்படி வாய்த்தது
நானருந்தும் நீரையும்
கள்ளாய் மாற்றும் ரசவாதம்?
No comments:
Post a Comment