Oct 20, 2024

ரசவாதம்

கடவுள் வந்திறங்கும்
பூசாரியின் தேகமென
உடல் விதிர்க்கின்றது
உன் பார்வைகளின் தீண்டலில்

யாக்கை கொதிக்கும்
இவ்வெக்கையைக் கொடுத்துவிட்டு
பனிமலையென நீயிருக்கிறாய்

இரைவெறியில் அலையும்
காதல் மனசு
ஊசிமுனையில்
ஊழித்தாண்டவம் நிகழ்த்துகிறது.

உனக்கெப்படி வாய்த்தது
நானருந்தும் நீரையும்
கள்ளாய் மாற்றும் ரசவாதம்?

No comments: