Oct 20, 2024

நீர்மை

யாருமற்ற தனிமையில்
ஆடை நெகிழ்வின் பிரக்ஞையற்ற
பெண்ணெனக் குளம்

கிரணங்கள்
தீண்டிய வெடவெடப்பில்
தாமரைகள்

சலிப்பற்ற சந்தோஷத்தில்
கும்மாளமிடும் மீன்கள்

நீருண்ட நன்றிக்கு
பூவுதிர்க்கும் மரம்

மேகங்களில் மின்னுகிறது
உன் முகம்

No comments: