கனவு

ஒரு கனவைப்போல்
காலம்
நம் நினைவுகளிலிருந்து தப்புகிறது

ஏறுவெயிலிடைப் பனித்துளி போலவும்

கடந்தவை
எதிர்
இரண்டுக்குமிடையே நுரைத்தெழும்புகிறது
வாழ்வின் மீதான பெருவிருப்பு

யுகங்களை ஊடுருவிக்கடக்கும் தாபம்
அரூபவெளியில்
இறைஞ்சுதலாய் அலையத் துவங்குகிறது

விகிதக்கணக்குகள்
வேறுபடத் துவங்குகையில்
பயம் மருவைப்போல் திரள்கிறது.

கேள்விக்குறியின் சுழி
கழுத்தில் முயற்கண்ணியாகிறது.

ஒவ்வொரு இரவிலும்
நம் உறக்கத்தின் ஆழம்
குறையத்துவங்குகிறது.

பிறகு
நாம் வாள் உயர்த்துகிறோம்
அத்தனை பயத்தோடு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence