Oct 20, 2024

கனவு

ஒரு கனவைப்போல்
காலம்
நம் நினைவுகளிலிருந்து தப்புகிறது

ஏறுவெயிலிடைப் பனித்துளி போலவும்

கடந்தவை
எதிர்
இரண்டுக்குமிடையே நுரைத்தெழும்புகிறது
வாழ்வின் மீதான பெருவிருப்பு

யுகங்களை ஊடுருவிக்கடக்கும் தாபம்
அரூபவெளியில்
இறைஞ்சுதலாய் அலையத் துவங்குகிறது

விகிதக்கணக்குகள்
வேறுபடத் துவங்குகையில்
பயம் மருவைப்போல் திரள்கிறது.

கேள்விக்குறியின் சுழி
கழுத்தில் முயற்கண்ணியாகிறது.

ஒவ்வொரு இரவிலும்
நம் உறக்கத்தின் ஆழம்
குறையத்துவங்குகிறது.

பிறகு
நாம் வாள் உயர்த்துகிறோம்
அத்தனை பயத்தோடு.

No comments: