இளமை

பெருஞ்சோறு தின்று
கொடும்புகை இழுத்து
முயங்கி முயங்கி மதுவருந்தி
சிறுகொடியிடை மாதர்
பெருமுலை பார்த்து
கிறுக்கலாய் கவிதைகளெழுதி
நாற்றம் பூத்த உடலில்
சுகங்கள் கீறி
வானம் பார்த்து
கனவுகள் நெய்து
உதட்டுச்சிரிப்போடு
உள்ளழுது கழியும் இவ்விளமை
எரிந்து வீழுமொரு
நட்சத்திரமன்றி வேறென்ன?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence