எதிர்வீட்டில்
மூன்றாவது தளத்தின்
வெளிறிய இருளடர்ந்த
பால்கனியில்
பொருத்தப்பட்ட ஓவியமென ஒருகணமும்
தத்தி நடைபழகும் புறாவென
மறுகணமும் அவளிருந்தாள்
விளக்கணைக்கப்பட்ட
அறையுள்ளிருந்து
பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு
மேற்கசிந்த மஞ்சள் ஒளியில்
அவள் முகம் சுடர்வதாகவே தோன்றியது
புலன் பெண்டுலம்
காதலுக்கும் காமத்துக்கும்
இடையோடிய நொடியில்
மூடப்பட்டிருந்த ஜன்னலை
கேள்விக்குறியாய்
தொட்டு நீண்டதவள் பார்வை
கண்ணாடி ஜன்னலை
வழுக்கிக் கடந்து
தோள் வந்தமர்ந்தன
இரண்டு புறாக்கள்
மற்றுமொரு பருந்து.
No comments:
Post a Comment