பிம்பங்கள் அழியாத கண்ணாடி
தினமும் ஓயாமல் புதிய கால்கள் முளைத்துக்கொண்டிருக்கும் வேட்டை மிருகத்தின் கண்களுக்கு காருண்யத்தின் சிறு நிழல்கூட தென்படுவேதேயில்லை.திசைகள் முயங்கிவிட்ட பரப்பில் நாவிலிருந்து சலமாக வெறி ஒழுக அலையும் கானகத்தில் வேறுயிர் ஏதுமில்லை.எதையேனும் தின்றாக வேண்டும்.எதிரில் கிடப்பவையோ கருமை அடர்ந்த பாறைகள்.தீண்டும் நாவில் வெயிலின் வெக்கையை தசை கொப்புளமாக்கிப் பார்க்கையில் மிருகம் எழுப்பும் ஊமைக் குமுறலை பட்சிகள் வினோதம் கொண்டு கேட்கின்றன.