நீலகண்டப் பறவையும் வெட்டுக்கிளியும்
நேற்று அதின் பந்த்யோபாத்யாயவின் ”நீலகண்ட பறவையைத் தேடி” நாவலை வாசித்து முடித்தேன். தமிழ்ச்சுழலில் பல ஆண்டுகளாக இந்த நாவல் பலராலும் குறிப்பிடப்படுவதைக் கவனித்திருந்தாலும் இந்திய நாவல்களின் மொழிபெயர்ப்புகளை அதிகமாக வாசித்ததில்லை. மேல்நிலைப் பள்ளிக்காலத்தில் பாதியோடு கைவிட்ட முகுந்தனின் மய்யழிக்கரையோரம் மலையாள நாவல்தான் மொழிபெயர்ப்பு வாசிப்பில் கடைசியானது. அதற்கு முன் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்திருந்த தோட்டியின் மகன் மற்றும் தகழியின் செம்மீன் வாசித்திருந்தேன். பிறகு என் வாசிப்பு அக்கல் பொறுக்கும் குக்கலைப் போலாகிவிட்டது.