Posts

Showing posts from March, 2026

தமிழ்நாட்டில் தேர்தலும் சாதியும்

கிட்டத்தட்ட இருபது வருஷங்களுக்கு முன்னால் தீராநதி போன்ற இதழொன்றில் தமிழக அரசியல் குறித்த ஒரு கட்டுரையை வாசித்தேன். எழுதியவரின் பெயரை சரியாக நினைவுகூர முடியவில்லை. அது தமிழக அரசியலின் இருதுருவ அரசியல் மற்றும் அதன் இயங்குமுறை பற்றிய கட்டுரை.

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence

Image
பல வருஷங்களுக்கு முன்பு, ஓரான் பாமுக் எழுதிய தி மியூசியம் ஆஃப் இன்னசென்ஸ் (வெகுளித்தனத்தின் அருங்காட்சியகம் என்றே இதை மனதில் கொண்டிருக்கிறேன், அறியாமையின் அருங்காட்சியகம் என்றல்ல) நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளியானவுடன் உடனடியாக வாசித்தேன். அப்போது நாவல் பெரிதாக ஈர்க்கவில்லை. அது பாமுக்கின் முந்தைய படைப்புகளிலிருந்து சற்று கீழே இறங்கிவிட்டதாகத் தோன்றியது. நாவலின் அடிப்படையான ஆதார உணர்ச்சி பிடிபட்டாலும் அது வெகுஜனத் தன்மை உடைய நாவல் என்று தோன்றியது, இன்றைக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். சங்க இலக்கியம் தொடங்கி நாளது வரையான தமிழர்களின் கலையிலும் வெகுஜனக் கலாச்சாரத்திலும் காதல் ஒரு வதிபட்ட படிமம். நமது திரைப்படங்கள் காதலைத் துவைத்துக் காயப்போட்டிருக்கின்றன. நமது கற்பனையில் இருக்கும் வடிவத்தில், நிஜ வாழ்க்கையில் காதல் இல்லை.

டாங்கோ நாவல் குறித்த மதிப்புரைகளின் தொகுப்பு

Image
டாங்கோ நாவல் குறித்து என் பார்வைக்கு கிடைத்த மதிப்புரைகள் மற்றும் விமர்சனங்களின் தொகுப்பு இது. இவற்றை வழங்கிய  நண்பர்களுக்கும் பிரசுரித்த இதழ்களுக்கும் நன்றி மதிப்புரை- சுனில் கிருஷ்ணன் குணா கந்தசாமி எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். புதிய நாவலான “டாங்கோவை” அவரது இரு இலக்கிய நண்பர்களான கே. என். செந்திலும் பாலாவும் வரைவு வடிவத்தில் வாசித்தார்கள் என்பது அவரை புரிந்து கொள்ள உதவும். பாலாவும் செந்திலும் ஒரு கிடைமட்ட கோட்டின் இரு எல்லைகள் என்று வைத்துக்கொண்டால் குணா இவர்கள் இருவருக்குமான நடுப்புள்ளி. அவரால் சுக்கிலம் போன்ற முற்றிலும் நவீன வாழ்வின் சிடுக்கை பேசும் கதையை எழுத முடியும் திரிவேணி போன்ற மண்ணில் காலூன்றிய கதையையும் எழுத முடியும். இந்த வீச்சு அவரை எனக்கு முக்கியமான எழுத்தாளராக ஆக்குகிறது.

சிறுகதை எழுதுவது எப்படி

Image
(01/03/2026 அன்று வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஏற்பாட்டில் இணையவழியில் நிகழ்ந்த சிறுகதைப் பயிற்சி முகாமில் பேசியவையின் கட்டுரை வடிவம்)                    புலம்பெயர் இலக்கியத்தின் கருப்பொருட்கள் சிறுகதை எழுதுவது எப்படி என்பதைப்பற்றி பேசுவதற்கு முன்னால் இந்த உரையாடலின் கருவான புலம்பெயர் வாழ்க்கையின் இலக்கியக் கருப்பொருட்கள் குறித்தும் பேசலாம். புலம்பெயர்தல் மனிதர்களுக்கு மிகப்பழைய விஷயம். ஆதிகாலத்தில் மனிதன் உணவுக்காக அலைந்து இடம்பெயர்வது நடந்தது. அப்படி அலைந்து திரிந்த, இன்னும் மொழி தோன்றியிராத காலத்திலும் மனிதனுக்கு தன்னுடைய நினைவைப் பதியவைக்கும் எத்தனங்கள் இருந்திருக்கின்றன என்பதற்கு குகை ஓவியங்கள் போன்றவை சாட்சியாக இருக்கின்றன. மொழி உருவானபிறகு அது மனித நினைவுகளின் பெட்டகமாக மாறுகிறது.