நெருப்பில் உருப்பெறும் இருட்சித்திரங்கள்
எட்டு நெடுங்கதைகளைக் கொண்ட கே . என் . செந்திலின் அரூப நெருப்பு தொகுப்பின் கதைகள் மனித உறவுகளில் சமூகத்தால் விலக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளைப் பற்றிப் பேசுபவையாகவும் புனிதம் என்னும் மேற்திரையை விலக்கி மனங்களுக்குள் அடிப்பிடித்திருக்கும் கசடுகளைக் காண்பவையாகவும் இருக்கின்றன . தொகுப்பின் முதல் கதையான தங்கச் சிலுவையைத் தவிர்த்த ஏனையவை குடும்பங்கள் மற்றும் தனிமனிதர்கள் சிதைவுறும் வாழ்வின் இருண்ட பக்கங்களைச் சித்தரிக்கின்றன .