Posts

Showing posts from January, 2018

புத்தாயிரத்தில் தமிழ்ச் சிறுகதையின் சில திசைகள்

Image
வளமான வரலாற்றை உடைய தமிழ்ச் சிறுகதை மரபில் இரண்டாயிரத்திற்குப் பின் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் சிறுகதையாசிரியர்களான அசதா(வார்த்தைப்பாடு), கே.என்.செந்தில் (இரவுக்காட்சி, அரூப நெருப்பு), இளஞ்சேரல் (NH திருச்சி அவினாசி சாலை சித்திரங்கள், தம்பான் தோது) , லக்ஷ்மி சரவணக்குமார் (நீலநதி, யாக்கை) , கணேசகுமாரன் (பைத்திய ருசி) ஆகிய ஐவருடைய சிறுகதைகளைக் குறித்த ஒரு பார்வையை அளிக்க இக்கட்டுரை முயல்கிறது. படைப்புலகத்தின் உள்ளடக்கம் மற்றும் சிறுகதை வடிவமுயற்சிகள்/கூறுமுறைகள் என்ற இருவகையான நோக்குகளை அடிப்படையாகக் கொண்டது இக்கட்டுரை. ஒருசில பலகீனங்கள் இருந்தபோதிலும் தங்களுக்கே உரித்தான தனித்த படைப்புலகத்தை இந்த ஐந்து சிறுகதையாசிரியர்களும் கொண்டிருக்கிறார்கள்.