புத்தாயிரத்தில் தமிழ்ச் சிறுகதையின் சில திசைகள்
வளமான வரலாற்றை உடைய தமிழ்ச் சிறுகதை மரபில் இரண்டாயிரத்திற்குப் பின் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் சிறுகதையாசிரியர்களான அசதா(வார்த்தைப்பாடு), கே.என்.செந்தில் (இரவுக்காட்சி, அரூப நெருப்பு), இளஞ்சேரல் (NH திருச்சி அவினாசி சாலை சித்திரங்கள், தம்பான் தோது) , லக்ஷ்மி சரவணக்குமார் (நீலநதி, யாக்கை) , கணேசகுமாரன் (பைத்திய ருசி) ஆகிய ஐவருடைய சிறுகதைகளைக் குறித்த ஒரு பார்வையை அளிக்க இக்கட்டுரை முயல்கிறது. படைப்புலகத்தின் உள்ளடக்கம் மற்றும் சிறுகதை வடிவமுயற்சிகள்/கூறுமுறைகள் என்ற இருவகையான நோக்குகளை அடிப்படையாகக் கொண்டது இக்கட்டுரை. ஒருசில பலகீனங்கள் இருந்தபோதிலும் தங்களுக்கே உரித்தான தனித்த படைப்புலகத்தை இந்த ஐந்து சிறுகதையாசிரியர்களும் கொண்டிருக்கிறார்கள்.