ஒன்று, எப்போதும் அதன் லட்சிய வடிவத்திலேயே நிகழ்வதில்லை
தற்குறி/தற்குறிக் கூட்டம் என்று வசை பாடப்பட்டாலும் நிகழும் தமிழக அரசியல் வரலாற்றின் உந்துவிசை விஜய்தான். சாதகமாகவோ பாதகமாகவோ அவர் ஒரு phenomenon. சுயவிருப்பத்தின் பேரில் கட்சி தொடங்கினார் அல்லது வலதுசாரி சக்திகளின் கள்ளக் கூட்டாளியாக இறக்கிவிடப்பட்டிருக்கிறார் என்பதெல்லாம் இரண்டாம்பட்சமானவை. சொகுசான அரசியல்வாதி, எழுதிக் கொடுத்ததைப் பேசுகிறார், சுய சிந்தனைத் இல்லை என்ற விமர்சனங்களில் உண்மையுண்டு. ஆனால் ஒரு ஆளுமையின் வெளிப்பாடு அல்லது ஒரு நிகழ்வு என்பது அதன் இலட்சிய வடிவத்திலேயே (ideal state) எப்போதும் நடப்பதில்லை (விடுதலைச் சிறுத்தைகளின் மீது இருபதாண்டுகளுக்கு முன்வைக்கப்பட்ட விமர்சனத்தை நினைவு கொள்ளலாம்). தோற்றமும் அரைகுறையாகவும் பிழைகளோடு இருந்தாலும் லட்சிய நிலை நோக்கி முன்னகர்வது முக்கியமானது. தூய்மையானவர்களே அரசியலுக்கு வரவேண்டும் என்பது இன்றைக்கு காகிதத்தில் மட்டும் எழுதப்பட்டிருக்கும் லட்சிய நிலை. இன்றைய நடைமுறை அரசியலில் தூய்மைக்கு என்ன தொடர்பு இருக்கிறது? ஆனால் ஒரு முரணாக, இங்கு ஏற்கெனவே ஊழல்வாதிகளாக, கறை படிந்தவர்களாக இருப்பவர்கள், தவெக வின் வருகையை, அதன் இருப்பைக் கண்டு அஞ்ச...