பசி தீராத மானுடம்
பசியும் காமமும் மானுட இயக்கத்தின் உந்துவிசைகளாக இருக்கின்றன.இவற்றைத் தணித்துக்கொள்வதற்கான தேடலில் மனிதன் எதிர்கொள்ளும் போராட்டங்களும் தோல்விகளும் வெற்றிகளும் கலைவடிவங்களுக்கு பிரதானமான உள்ளடக்கமாக இருக்கின்றன. பசியைத் தணிப்பதற்கான போராட்டம் புறவயமானதாக இருக்கையில் காமத்தின் போராட்டம் அகவயமானதாக இருக்கிறது. மேலும் காமம் உள்ளூறுவதற்குப் பசிதணிந்த வயிறு தேவையானதாக இருக்கிறது. மானுட வாழ்வெனும் சுழற்சியின் ஆரக்கால்களாக இவையிரண்டும் இருக்கின்றன.