நாவலின் தொடக்கமும் முடிவும்-மிலோரட் பாவிச்
தன்னுடைய முதல் நூறு வாசகர்களின் முகங்களைக் காண போர்ஹெஸ் ஆவலாக இருந்தார். என்னுடைய ஆவல் வேறுபட்டது. கடைசி நூறு வாசகர்களின் முகங்களை அல்லது பரிதாபகரத்தைக் குறைவுபடுத்திச் சொல்ல வேண்டுமெனில் நாவல் வடிவத்தின் கடைசி நூறு வாசகர்களின் முகங்களைக் கண்டுவிடக்கூடிய சவாலின் முன் நாமெல்லோரும் நிற்கிறோமில்லையா?