நினைவுத்திரள் உருப்பெறுவதற்கு முன்னான குழந்தைப்பருவத்தின் உறக்கங்களில் கனவுகள் கண்டேனா என்பதை சரியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் நினைவு தெரிந்த பின்னால் உறக்கத்தில் கனவுகள் வராத இரவுகளே இல்லையென்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். பெரும்பாலும் துர்க்கனவுகள். சுப கனவுகளை எண்ணினால் ஒரு கை விரல்களே போதுமானது.