Posts

Showing posts from May, 2013

பூமணியின் ”அஞ்ஞாடி” - சில குறிப்புகள்

Image
தென் தமிழக மக்களின் ஒரு நூற்றாண்டு கால வாழ்க்கையை காட்சிப்படுத்தும் பூமணியின் அஞ்ஞாடி நாவலை மூன்று அடுக்காக பிரிக்கலாம்.

சகடம்

மேற்கே போகும் பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தவன் உடல் தழுவிய சிலுசிலு காற்றை அனுபவித்தான்.மற்ற நேரமாயிருந்தால் உடல் கசகசப்போடு வியர்வையில் ஊறிக்கொண்டிருக்கும். இரு பக்கங்களிலும் பொட்டல் காடுகள் வறண்டு கிடக்க தூரத்தில் காற்றாடிகள் மெதுவாக சுற்றிக்கொண்டிருந்தன. அந்த ஊருக்கு இன்றைக்குத்தான் முதன்முதலாக போகிறான். நாற்பது மைல் சுற்றளவுக்குள்ளேயே பதினேழு வயது வரை சுற்றிக் கொண்டிருக்கிறவனுக்கு வருங்காலத்தில் அங்கேதான் குடியேறவேண்டுமென்று நினைப்பிருக்கிறது.

கிழக்கில் ஒரு காலம்

பரந்த கிணற்றுக்குள் நிலவின் பிம்பம் மெலிதாக அசைவாடிக்கொண்டிருந்தது. தலையுயர்த்தி வானத்தைப் பார்க்க உயரத்தில் சிறு சிறு மேகங்கள் மஞ்சள் படிந்த வெண்மையோடு நகர்ந்து கொண்டிருந்தன.தென்னைகளில் உரசிச் சலசலத்த காற்று ஆடைகளற்ற உடலை தழுவிப்போனது.ஒரு கணம் கண்களை மூடித் திறந்தவன் கைகளிரண்டையும் முன்னால் நீட்டிக் கூப்பிக்கொண்டு கத்திப்பாய்ச்சலாய் கிணற்றுக்குள் குதித்தான்.சப்தமும் நீரும் கிணற்றுச் சுவர்களில் மோதித் தெறிக்க தரை தொட்டு வழுவழுப்பாய் இருந்த மண் ஒரு குத்து அள்ளியவாறே வேகமாக நீருக்கு மேலே வந்து தலையை சிலுப்பியவன் மெல்ல மண்ணை முகர்ந்துவிட்டு கரையவிட்டான்.