எழுத்தாளருக்கான மதிப்பூதியம் - ஒரு விவாதம்
1. இந்த விஷயத்தை இப்போதைக்கு நான் முழுக்கவும் புறவயமாகவும்( Objective) ஆகவும் கொள்கையளவிலுமே (In principle) வைத்துப் பேச நினைக்கிறேன். தமிழில் பதிப்புத் தொழிலில் தேனும் பாலும் ஓடவில்லை என்று புரிகிறது. ஆனால் அது நிஜமாகவே மோசமான சூழலில் இருக்கிறதென்றால், எவ்வளவு மோசமான சூழலில் இருக்கிறது என்பது, பதிப்பாளர்கள் தரவுகளின் மூலம் வெளிப்படையாக வைக்காதவரை நமக்குத் தெரியப்போவதில்லை. ஒரு பதிப்பகம் நீண்ட காலம் தொழிலில் இருந்தால் நஷ்டத்தில் இயங்கவில்லை என்று ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்ளலாம்.