Posts

Showing posts from January, 2015

ரத்தமும் ஒயினும் கலந்த எழுத்து

Image
                                                                 உண்மையான ஓவியமென்பது இரத்தத்தைப்போல் உயிரணுவைப்போல் தசையிலிருந்து(guts) வரவேண்டும் என்பதாய் மரியா வர்கஸ் யோசாவின் சொர்க்கத்திற்கான பாதை(Way to Paradise) நாவலில் ஒரு வரி வரும். லத்தீன் அமெரிக்க இலக்கிய எழுச்சியின் முக்கிய ஆளுமைகளான மார்க்வெஸ், யோசா, புயண்டஸ், ஹூலியோ கொர்த்தஸார் போன்றோரின் படைப்புக்களை வாசிக்கையில் அவர்களுடைய எழுத்துக்களுங்கூட தசையிலிருந்து தோன்றியவையாகவே உணர்கிறேன். நினைவு மற்றும் மீபுனைவாக்கத் தளங்களில் இயங்கிய போர்ஹேஸை இவர்களிடமிருந்து வேறுபட்டவராகச் சொல்லலாம். இவர்களைத் தவிர்த்து இவான் ருல்போ, அலேஹோ கார்ப்பெந்தியார், இவான் கார்லோஸ் ஒன்னெட்டி, இஸபெல்லா ஆலண்டே ஆகியோரை உள்ளிட்ட இன்னொரு நீண்ட வரிசையும் இருக்கிறது.

கற்கள் சொல்லும் சரித்திரம்

Image
                                         நாவல் எழுதுகிறேன் என்று சொல்லிக்கொள்வது ஒருவிதத்தில் சீட்டுக்கம்பெனி நடத்துவது போலத்தான்.சொன்னால் நம்புவார்கள். கடைசியில் நாம் கம்பி நீட்டிவிடலாம். போனவருஷம் மூலைக்கு மூலை நாவல் எழுதுகிறார்கள் என்று ஒரே பரபரப்பாயிருந்தது. நாற்பத்தியிரண்டு தமிழ்க்கவிஞர்கள் நாவல் எழுதிக்கொண்டிருப்பதாக இன்னொரு திடுக்கிடும் தகவலும் வந்தது. எத்தனை வெளியாகியிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால் நாவல் எழுதும் வேலை என்பது நாவல் எழுதுவதைப்பற்றிக் காணும் கனவுபோல் சுவாரசியமானதாக இல்லை. எலும்புதேய எழுதவேண்டும்.முதுகுவலி வரும்வரை எழுதினீர்கள் என்றால் நீங்கள், உங்களை உங்கள் காலத்தின் முதன்மையான,மகத்தான எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளலாம்.