வெளியில் ஒருவன் – கார்த்திகைப் பாண்டியன் கதைகள்
கார்த்திகைப்பாண்டியன் கதைகளில் ஒரு இளைஞன் இருக்கிறான். மரணம் மற்றும் வாழ்வின் நிலையாமை குறித்த தொந்தரவூட்டும் எண்ணங்கள், நுரைத்துப் பொங்கும் காமத்தின் வேட்கையைத் தணித்துக்கொள்ள வடிகால்கள் இல்லாமை, புறவுலகில் எதிர்கொள்ள நேரும் எதிர்மறையான அபத்தக்காட்சிகள் போன்றவை அவனுடைய பிரத்யேகமான தன்னிலையிலிருந்து கிளைத்தெழும் வாழ்க்கைச் சிக்கல்களாக இருக்கின்றன.