Apr 20, 2015

நித்ய விலங்கு

சாஸ்வத மிருகம்
மண்ணில் அலைகிறது

இளைக்காத
பெரும் பிறப்பு

தசைக்கோளம்
பழுதுறா எந்திரம்

அழியாதது
அனாதை என்று
கைவிடப்பட்டுத் திரிகிறது

துயரம்
அதற்கு

யாசிக்க
ஒரு
பொல்லா
வினையோனுங் கூட

பூ
கீ
மே
லோகங்களில் இல்லை


யிரோ
டலோ
டு

No comments: