பேரன்பு கொண்டவன் நான்
என்னைக் கடக்கும்
இவளிடம்
இந்த நாயிடம்
அந்த பிச்சைக்காரனிடம்
உரத்துச் சிரிக்கும்
தெருமுனை சித்தனிடம்
என்னைத் தொந்தரவூட்டாத
எதனிடமும்
**
உன் முலைபிளவுக்குள்
முகம்பதித்து
அழுகை தணிக்கத் துடிக்கும்
குழந்தைதான் நான்
துளிக்காமம் தடுக்கிறது
No comments:
Post a Comment